தீபக் பேட்டியின் பின்னணியில் சசிகலா குடும்பம் உள்ளது.. தீபா
தனது சகோதரர் தீபாவின் பின்னணியில் சசிகலாவின் குடும்பத்தினர் இருப்பதாக எம்ஜிஆர் அம்மா தொடங்கியுள்ள தீபா ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.
சென்னை: தினகரனுக்கு எதிராகவும், தனக்கு ஆதரவாகவும் தனது சகோதரர் தீபக் கொடுத்த பேட்டியின் பின்னணியில் சசிகலாவின் குடும்பத்தினர் உள்ளதாக தீபா குற்றம்சாட்டினார்.
தினகரனின் தலைமையேற்க விரும்பவில்லை என்றும், தீபா, அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் நேற்று தீபக் பரபரப்பு பேட்டி அளித்தார்.
இந்நிலையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கிய தீபா
இன்று திநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் அளித்த பேட்டி: தீபக்கின் பேட்டியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. நான் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவதைத தடுக்கவே தீபக் இதுபோன்ற பேட்டி அளித்துள்ளார். துரோக கூட்டத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்பேன். தமிழகத்தை ஆசியாவிலேயே முதன்மை மாநிலமாக்குவேன். இரட்டை இலை சின்னத்தை மீட்பேன்.
தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுவேன். அரசியல் படுகொலை செய்தவர்களின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க போராட வேண்டும். எனது பேரவை உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடும். நான் தொடங்கியது அமைப்புதான் கட்சி அல்ல.