லோக்சபா தேர்தலில் எனக்கு எதிராக சதி செய்துவிட்டனர்: ஆ.ராசா!
கோவை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு குற்றச்சாட்டில், தி.மு.க.வின் மீதான களங்கம் வருகின்ற மார்ச் மாதத்திற்குள் நீங்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் எனக்கு எதிராக சதி நடைபெற்றுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும், தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலருமான ஆ.ராசா உதகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ''2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் தீர்ப்பு வெளியாகிவிடும் என்றார்.

களங்கம் நீங்கும்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு குற்றச்சாட்டில் தி.மு.க.வின் மீதான களங்கம் நீங்கும். இதன்மூலம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. குற்றச்சாட்டுகளின்றி எதிர்கொள்ளும். அப்போது தேர்தல் முடிவுகளும் மாறிவிடும் என்று ராசா கூறினார்.

மோடி அலை
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி அலை வீசியதால், பா.ஜ.க. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி
அத்துடன் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காததும், காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாக அமைந்துவிட்டது.
அந்த தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தாலும், இதே தோல்வி தான் ஏற்பட்டிருக்கும்.

சதி செய்த அதிமுக
ஆனால், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிட்டிருந்தால் நான் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பேன். எனக்கு எதிராக சதி செய்யப்பட்டு விட்டது" என்றார்.
-
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
ஹார்முஸ் நீரிணை உலகத்தின் இதயம்.. இந்தியா டூ அமெரிக்காவை ஆடிப்போக வைத்த ஈரான் செயல் -
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிக்கு தந்த ட்விஸ்ட்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்தை அனுப்பியது ஏன்?












Click it and Unblock the Notifications