ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லை.. ஜெ. மரண விசாரணையில் பாதிப்பு
நாளை மற்றும் நாளை மறுநாள் நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் விசாரணை கிடையாது.
சென்னை: நீதிபதி ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் இரு நாட்களுக்கு விசாரணை ஏதும் நடைபெறாது என்று தகவல்கள் கூறப்படுகின்றன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைநடத்த தமிழக அரசு சார்பில் கடந்த
ஆண்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் அவர் விசாரணையை துவக்கினார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நெருங்கிய நண்பர்கள், அதிகாரிகள் என பல தரப்பினரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், போயஸ் தோட்ட சமையலர் சேகர் ஆகியோருக்கு முறையே நாளை மற்றும் நாளை மறுநாள் விசாரணைக்கு சம்மன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் இரு நாட்களுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பூங்குன்றனும் , சமையலர் சேகரும் ஆஜராகும் தேதி பின்னர் அறவிக்கப்படும் என்று ஆணையம் தகவல் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications