For Daily Alerts
Just In
+2, 10ம் வகுப்பு தேர்வில் "ரேங்க்" ஒழிப்பு.. இனி "1-2-3" கிடையாது.. தமிழக அரசு அதிரடி
ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இனி ரேங்க் முறை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இனி ரேங்க் அறிவிக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில அளவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களின் பெயர் அறிவிக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary
Tamilnadu govt announces that There will no rank System anymore int the 12th standard results. 12th standard results will be announced tomorrow.