தூத்துக்குடி: 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 25ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1982ம் ஆண்டு முதல் 89ம் ஆண்டுவரை ஒரே வகுப்பில் இணைந்து பிளஸ் டூ வரை படித்த நண்பர்கள் 25ஆண்டுகளுக்கு பின்பு இன்று சந்தித்தனர்.
இதற்கான சந்திப்பு விழா தூத்துக்குடி டி.எஸ்.எப் ஹோட்டலில் நடந்தது.
விழாவிற்கு பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள் பாக்யராஜ், ராஜசேகரன் தலைமை வகித்தனர். மாணவ நண்பர்களான தொழில்அதிபர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ்திலக், கப்பல் கேப்டன் சிவராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பங்கேற்ற நண்பர்கள் தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த 17ஆசிரியர்களையும் வரவழைத்து கவுரவித்தனர்.
முதுமையால் மரணம் அடைந்த தங்களின் ஆசிரியர்களின் மறைவிற்கு இரங்கல் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்களின் இன்றைய வாழ்க்கை, வேலை, குடும்ப உறவுகள், கடந்தகால நட்பின் மலரும் நினைவுகளை எல்லாம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்களான செந்தில்ராஜன், சாம்ராஜ், அருண்பிரகாஷ், சாமுவேல்பெனட், ஆனந்த்டிவோட்டா ஆகியோர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications