அம்மா உணவக வரலாற்றிலேயே முதல் முறையாக.. அண்டாகுண்டா, தண்ணீர் குழாய், பணம் திருட்டு!
திருச்சி: திருச்சியில் அண்டாகுண்டான் என்ற இடத்தில் உள்ள அம்மா உணவகத்தில் யாரோ சிலர் புகுந்து அங்கிருந்த பாத்திரம், 75ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு போய் விட்டனர்.
தமிழக அம்மா உணவக வரலாற்றில் திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் போலீஸார் டென்ஷனாகியுள்ளனர்.

திருச்சி அண்டாகுண்டான் பகுதியில் அம்மா உணவகம் உள்ளது. இங்கு நேற்று இரவு யாரோ சில மர்ம மனிதர்கள் புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த குடிநீர் குழாய், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை திருடியுள்ளன். மேலும் அங்கிருந்த பணத்தையும் திருடியுள்ளனர்.
இன்றுகாலைதான் திருட்டு சம்பவம் குறித்துத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அம்மா உணவகத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் என்பதாலும், தமிழகத்திலேயே முதல் முறையாக இங்குதான் அம்மா உணவகத்தி்ல திருடர்கள் கை வைத்துள்ளனர் என்பதாலும் போலீஸார் திருடர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications