நடுரோட்டில் காரை மடக்கி ரூ.1 கோடி கொள்ளை- கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடுரோட்டில் காரை மடக்கி ரூபாய் 1 கோடி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தத்தில் இருந்து தொழிலதிபர் ஒருவர் காரில் ரூ.1 கோடியினை எடுத்துக் கொண்டு சென்னை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஓச்சேரி அருகே காரை மடக்கிய சிலர் கொண்ட கும்பல் அவரிடமிருந்து 1 கோடியையும் வழிப்பறி செய்து கொண்டு ஓடிவிட்டனர்.

காரை மடக்கி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், அவர் பணம் எடுத்து வருவது தெரிந்த யாரோ சிலர்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பயணிக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications