பெண்களே, காதலர் தினமான இன்று இதையெல்லாம் செய்யாம இருங்க, புண்ணியமாப் போகும்!
சென்னை: காதலர் தினத்தன்று பெண்கள் எதை எதை எல்லாம் செய்யக் கூடாது என்று தெரியுமா?
பிப்ரவரி 14ம் தேதி வந்தால் காதல் ஜோடிகளை கையில் பிடிக்க முடியாது. அன்றைய தினத்தை காதலனும், காதலியும் சேர்ந்து தங்களுக்கு பிடித்தவாறு கொண்டாடுவார்கள்.
காதலை கொண்டாடும் நாளில் பெண்கள் சிலவற்றை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
அப்படி எதை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்,

பக்கி
காதலனுடன் வெளியே செல்கையில் உங்களிடம் இருக்கும் நல்ல ஆடையை அணியவும். பக்கி போன்று செல்ல வேண்டாம்.

நச்சரிப்பு
ஆண்களுக்கு நச்சரிப்பது சற்றும் பிடிக்காது. அதனால் எதற்கெடுத்தாலும் நச்சரிக்காதீர்கள். காதலன் செல்போனில் நண்பனுடன் பேசினால் உடனே நான் வேண்டுமா, நண்பன் வேண்டுமா என்று சண்டைக்கு பாயாதீர்கள்.

துணிச்சல்
கோழையாக உள்ள பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது. அதனால் துணிச்சலாக வீரத் தமிழச்சியாக இருங்கள்.

அடுத்த ஆண்கள்
காதலனுடன் இருந்து கொண்டு வேறு ஒரு ஆணை பற்றி புகழ்ந்து பேசாதீர்கள். அது காதலர் தினத்தை காதல் முறிவு தினமாக்கிவிடும்.

ஒப்பிட்டு பார்க்காதீர்கள்
என் தோழியின் காதலன் எல்லாம் வாழ்த்து அட்டை, ரோசாப்பூ, பரிசு கொடுத்திருக்கிறான் நீயும் தான் இருக்கியே என்று பிறருடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம். வாழ்த்து அட்டை, பூ, பரிசை வைத்து காதலை மதிப்பிடாதீர்கள்.












Click it and Unblock the Notifications