திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம்
திருச்செந்தூர்: மார்கழி மாதம் தொடக்கத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வருவது வழக்கம். மாசி திருவிழா, வைகாசி விசாகம், ஐப்பசி கந்த சஷ்டி விழா ஆகியவற்றை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவை காண தென் மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இந்நிலையில் மார்கழி மாதம் இன்று பிறக்கிறது. இதையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று திருப்பள்ளி எழுச்சி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. எனவே இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புத்தாண்டு நள்ளிரவு மற்றும் பொங்கல் பண்டிகை அன்று சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications