ஜெ. விடுதலைக் கோரி... அ.தி.மு.க. நகர்மன்ற பெண் தலைவர் தலைமையில் மொட்டை போட்ட 100 பேர்
திருச்செங்கோடு: அதிமுகப் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் பொன்சரஸ்வதி உட்பட நூறுக்கும் அதிகமான அதிமுக தொண்டர்கள் மொட்டை அடித்துக் கொண்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி அதிமுகவினரும், மற்ற துறையினரும் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதில் ஒரு கட்டமாக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் பொன்சரஸ்வதி, நகர செயலாளர் மனோகரன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் இன்று மொட்டை அடித்துக் கொண்டனர்.
திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் மலைக் கோவிலுக்கு கீழ் பகுதியில் உள்ள ஆறுமுகசாமி கோவிலில் அவர்கள் மொட்டை அடித்தனர். அதேபோல அ.தி.மு.க. தொண்டர் சைக்கிள் வடிவேல் என்பவர் இன்று மொட்டையடித்து விட்டு அர்த்தநாரீசுவரர் கோவிலில் உள்ள 1200 படிக்கட்டுகளையும் முட்டி போட்டு ஏறினார்.












Click it and Unblock the Notifications