திருச்செந்தூர் - பழனி பயணிகள் ரயில் நேரம் மாற்றம்
நெல்லை: திருச்செந்தூர் - பழனி பயணிகள் ரயில் நேரம் வரும் 25 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பழனியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பயணிகள் ரயில் எண் 56769 தினமும் காலையில் 7.20 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரயில் வரும் 25 ஆம் தேதியிலிருந்து பழனியிலிருந்து 8.05க்கு புறப்படும். திண்டுக்கல்லுக்கு காலை 9.15 மணி்க்கும், திருச்செந்தூருக்கு மாலை 4 மணி்க்கும் போய் சேரும். இது போல் திருச்செந்தூர் பயணிகள் ரயில் எண் 56770 காலை 10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 11.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில் மதுரைக்கு மாலை 4.05க்கும், பழனிக்கு இரவு 7.10 மணிக்கும் போய் சேரும். மற்ற ரயில் நிலையங்களில் பயணிகள் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நேர விபரங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் எண் 56763 காலை 11.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக வரும் 25 ம் தேதி முதல் காலை 11.05 க்கு புறப்படும். இந்த ரயிலின் நெல்லை முதல் காயல்பட்டினம் வரை நேரம் மாற்றம் இல்லை. இந்த தகவலை மதுரை ரயில்வே கோட்ட முதுநிலை மக்கள் தொடர்பு அதிகாரி வேணுகோபால் தெரிவித்தார். .












Click it and Unblock the Notifications