ஆயா வேலைக்குக் கூட காசு.. ஊழல் ஜாம்பவான்களை எதிர்த்து வரலாறு படைப்போம்: திருமா

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழகத்தில் ஆயா வேலைக்கு கூட பணம் கொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விட்டனர். இந்த நிலையை மாற்றி புதிய வரலாறு படைப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி பேருந்துநிலையம் அருகில் மக்கள் நலக்கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பெண்களின் கண்ணீர்...

பெண்களின் கண்ணீர்...

சாராயக் கடையை மூடுங்கள் என பெண்கள் கண்ணீர் விட்டுக் கதறுகிறார்கள். யார் அழிந்தால் என்ன என்று அக்கறை அற்றவர்களின் கையில் ஆட்சி இருக்கிறது.

ஆயா வேலைக்கும் பணம்...

ஆயா வேலைக்கும் பணம்...

ஆயா வேலை, சமையலர் வேலை, கண்டக்டர் வேலைக்குக்கூட பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டனர்.

மக்கள் மனநிலை...

மக்கள் மனநிலை...

திமுக, அதிமுக பலம் தெரியாமல் நாங்கள் இல்லை. தெரிந்துதான் நாங்கள் இணைந்திருக்கிறோம். மக்கள் மனநிலையை உணர்ந்து நாங்கள் சேர்ந்திருக்கிறோம். தொகுதியை, வாக்கைப் பகிர்ந்து கொள்வதற்காக கூட்டணி அமைக்கிறார்கள்.

புதிய வரலாறு...

புதிய வரலாறு...

மக்கள் நலக்கூட்டணி தமிழகத்தில் புதிய வரலாறு படைக்கப் போகிறது. இவ்வளவு காலம் ஒற்றையா, இரட்டையா என்று மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தனர். மாற்றை முன்வைக்கவில்லை. ஊழலை ஒழிக்கும் தகுதி இந்த அணித் தலைவர்களுக்குத்தான் உண்டு!

அக்னி பரீட்சை...

அக்னி பரீட்சை...

இது ஒரு அக்னி பரீட்சைதான். எதிரே நிற்போர் ஊழல் ஜாம்பவான்கள். ஆனால் நாங்கள் மக்கள் பலம், கொள்கை பலத்தை நம்பி களத்தில் நிற்கிறோம். நம்மால் அவர்களை வீழ்த்த முடியும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+