தலித் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டம் இயற்ற மோடி உறுதியளிக்க வேண்டும்: திருமாவளவன்
தலித் வன்கொடுமைகளுக்கு எதிராக மோடி சட்டம் இயற்ற திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை: தலித் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டம் இயற்ற மோடி உறுதியளிக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், காயம்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியும் வழங்க வேண்டும். பழையனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் மட்டும் போதாது. அவர்கள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலித்துகளுக்கு வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் .கடுமையாக இருந்தவரை அவர்களுக்கு எதிரான தாக்குதலும் குறைந்திருந்தது. ஆனால், தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பால் அது நீர்த்துப் போய் உள்ளது. மோடி அரசு இதற்கு மாற்றாக கடுமையான சட்டம் இயற்றும் என பாஜக தலித் தலைவர்களிடம் கூறியுள்ளதாக தகவல் வருகின்றது. அது நிறைவேற மோடி உறுதியளிக்க வேண்டும்.
தூத்துக்குடியில் போராடிய மக்களை சமூக விரோதிகள் என கூறியது ,யார் சமுக விரோதிகள் என ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும். உரிமைக்காக-போராடும் மக்களை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது சமுக. விரோதிகள் என கூறுவது.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications