இலங்கை மீது சர்வ தேச விசாரணை நடத்த வேண்டும்.. கால நீடிப்புக் கூடாது.. திருமாவளவன் கோரிக்கை
இலங்கை மீது சர்வ தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கோரியுள்ளார். சென்னை எழும்பூரில் இதுதொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அவர் இவ்வாறு கூறினார்.
சென்னை: சர்வ தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டும் என்று கோரி மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தந்தைப் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையின் தந்திரம்
இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டிய விசாரணையை இதுவரை தொடங்கவில்லை. மைத்ரி பால சிறிசேனா அரசு அதற்கான முயற்சியை செய்யவில்லை. இப்போது கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், 2019 வரையில் கால நீடிப்பு வேண்டும் என்றும் நாங்களே அந்த நீதி விசாரணையை நடத்தி முடிப்போம் என்று ஒரு வரைவு தீர்மானத்தை இலங்கை அரசு கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளின் துணையோடு நீடிப்பை பெறுவதற்கும் அது முயற்சிக்கிறது.

சர்வ தேச குற்றவியல் நீதிமன்றம்
இந்த கால நீடிப்பை வழங்குவது எந்த வகையிலும் நியாயமானதல்ல. ஆகவே, இந்த விசாரணையை ஐ.நா பொதுப் பேரவைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதனைத் தொடர்ந்து சர்வ தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அல்லது அதற்கான தீர்ப்பாயத்திடம் இதனை ஒப்படைக்க வேண்டும்.

கேட்பது இதுதான்..
நாங்கள் ஐ.நா. அமைப்பிற்கும் சர்வ தேச சமூகத்திற்கு விடுகின்ற வேண்டுகோள் இதுதான். இலங்கை அரசுக்கு கால நீடிப்பு தரக் கூடாது, உள்ளக விசாரணையை அனுமதிக்கக் கூடாது, ஐ.நா. பொதுப் பேரவைக்கு கொண்டு சென்று அதன் மூலம் சர்வ தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழீழம் எப்போது?
தமிழீழம் தொடர்பான பொது வாக்கெடுப்பை உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழர்களிடையே நடத்துவதற்கு ஐ.நா. பேரவை அனுமதிக்க வேண்டும். அதற்கான ஆணையிட வேண்டும் என்றும் கோருகிறோம்.

இந்திய செய்ய வேண்டியது?
இந்திய அரசு வழக்கம் போல இலங்கை அரசுக்கு துணை நிற்பதிலேயே தீவிரம் காட்டுகிறது. இந்திய அரசு உள்ளக விசாரணைக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்கக் கூடாது. கால நீடிப்பிற்கு ஆதரவளிக்கக் கூடாது. இதனை சர்வ தேச விசாரணைக்கு கொண்டு செல்ல இந்திய அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக எம்பிக்கள் மத்திய அரசுக்கு இந்தக் கருத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications