அப்பவே ஒன்னும் முடியாத பாஜகவுடன் விஜகாந்த் கூட்டணி வைப்பாரா?: டவுட்டை கிளப்பும் திருமா
சென்னை: விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு தான் வருவார் என பாஜக, திமுக, மக்கள் நலக் கூட்டணியினர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் விஜயகாந்தோ கூட்டணி குறித்து வாய் திறக்காமல் உள்ளார். அதனால் அனைவரின் கவனமும் விஜயகாந்த் மீது தான் உள்ளது.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, தேமுதிகவுடன் கூட்டணி வைத்தது. நாட்டில் அப்போது மோடி அலை வீசிய போதும் கூட பாஜக கூட்டணியால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வெறும் 2 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது.
இப்படி இருக்கையில் விஜயகாந்த் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அமைச்சர் ஜவடேகரின் கருத்திற்கு விஜயகாந்த் என்ன முடிவு செய்வார், என்ன கருத்து தெரிவிப்பார் என்பதை பார்த்துவிட்டு மக்கள் நலக் கூட்டணி தனது முடிவை அறிவிக்கும்.
வரும் 13ம் தேது வட மற்றும் மத்திய சென்னையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் மக்களை சந்தித்து பேச உள்ளோம். அதன் பிறகு 4 தலைவர்களும் தொகுதி பங்கீடு குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்து அறிவிப்பு வெளியிடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications