அனைவரையும் விமர்சிக்கும் எச். ராஜாவுக்கு என்ன ஆனது என தெரியவில்லை: தொல். திருமாவளவன் தாக்கு
அனைவரையும் விமர்சிக்கும் எச். ராஜாவுக்கு என்ன ஆனது என தெரியவில்லை என திருமாவளவன் சாடியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனைவரையும் கடுமையாக விமர்சிக்கும் பாஜக தேசிய செயலர் எச். ராஜாவுக்கு என்ன ஆனது என தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சாடியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் வந்தே மாதரம் பாடலை அனைவரும் பாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் அதிர்ச்சியை தருகிறது.

மனித உரிமை போராளிகள், சமூக போராளிகள் மீது தமிழக அரசு அடக்குமுறையை கையாண்டு வருகிறது. பாஜகவின் தேசிய செயலர் அனைவரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஹெச். ராஜாவுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. இவ்வாறு தொல். திருமாவளவன் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications