காவிரி தண்ணீரை திறந்து விட பிரதமரை நேரில் வலியுறுத்த வேண்டும்- முதல்வருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
காவிரி தண்ணீரை திறந்துவிட பிரதமரை நேரில் வலியுறுத்த வேண்டும் என முதல்வரை திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்தை தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி பிரதமரை முதல்வர் நேரில் வலியுறுத்த வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் இதுவரை நேரம் ஒதுக்காததால் புதிய வழக்கு தொடர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியில் இருந்து ஆண்தோறும் 192 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா 111 டிஎம்சி தண்ணீரை தான் திறந்துள்ளது. மீதமுள்ள 82 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நேரம் ஒதுக்குமாறு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் காவிரி நீரை திறந்து விட முடியாது என கர்நாடக தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு அடுத்த நடவடிக்கை இறங்கியுள்ளது.
இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்தை தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி பிரதமரை முதல்வர் நேரில் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், ஆணவ கொலைக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications