மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மாணவர்கள்-போலீசாரிடையே தள்ளுமுள்ளு! நெல்லையில் பரபரப்பு
தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி : மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு லட்த்து 60 ஆயிரம் பேர் பயில்கின்றனர். அண்மையில் தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இன்று நெல்லை அபிசேக பட்டியில் உள்ள பல்கலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடுப்பு பலகைகளை தாண்டி செல்ல முயன்ற மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பல்கலை பதிவாளர் ஜான் டி பிரிட்டோ மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.












Click it and Unblock the Notifications