ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு மையம்.. கிராமப்புற மாணவனுக்கு ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலை மீது உள்ள பள்ளியில் அமைந்த நீட் தேர்வு மையத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவித்த கிராமப்புற மாணவனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தனது காரில் அழைத்து கொண்டு தேர்வு மையத்தில் இறக்கிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Recommended Video
நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய இந்த தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை அதிகரித்திருந்தது. நேற்று மதியம் 2 மணிக்கு நடைபெற்ற தேர்வு 5 மணிக்கு முடிவடைந்தது.

நீட் தேர்வு வேண்டாம்
தேர்வு முடித்துவிட்டு வந்த மாணவர்கள் கூறுகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு, கொரோனா பரவல், தேர்வு அச்சம், மருத்துவ கனவு என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் அவர்கள் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு மையம்
இந்த நிலையில் ஏலகிரி மலை மீது உள்ள பள்ளியில் அமைந்துள்ள நீட் தேர்வு மையத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவித்த கிராமத்து மாணவனை தனது காரில் அழைத்து சென்று மாணவனை பத்திரமாக மையத்தில் சேர்த்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நீட் தேர்வுக்கு தயார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் என்ற மாணவர். இவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவருக்கு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி கிராமத்தில் இருந்து ஏலகிரி மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நீட் தேர்வு எழுத மையம் ஒதுக்கப்பட்டது.

திருவண்ணாமலையிலிருந்து திருப்பத்தூர்
இதையடுத்து அந்த மாணவன் திருவண்ணாமலையிலிருந்து கிளம்பி திருப்பத்தூர் சென்றார். அங்கு ஏலகிரி சென்ற மாணவனுக்கு மலை பகுதியில் உள்ள பள்ளி செல்ல வழி தெரியாமல் அவதிப்பட்டார். அப்போது அவ்வழியே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா காரில் சென்று கொண்டிருந்தார்.

காரில் அழைத்து சென்ற ஆட்சியர்
இந்த மாணவர் தன்னந்தனியாக நின்று கொண்டு எல்லோரிடமும் பள்ளி முகவரி கேட்டதை அறிந்து வேடியப்பனிடம் விசாரித்தார். அப்போது அவர் ஏலகிரி மலை மீதுள்ள பள்ளிக்கு நீட் தேர்வு எழுத செல்வதாகவும் அதற்கு வழி தெரியாமல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த மாணவரை தனது காரில் ஏற்றிச் சென்று தேர்வுக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் கோரிக்கை
ஏலகிரி மலையில் டான்போஸ்கோ மையத்தில் இந்த மாணவன் தேர்வு எழுத உதவிய ஆட்சியரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் தேர்வுக்கு 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் அந்த மாணவனை உரிய நேரத்தில் தேர்வு மையத்தில் கொண்டு சேர்த்த சம்பவம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இது போன்ற முக்கிய தேர்வுகளின் போது அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு பேருந்துகளை இயக்கினால் இது போல் மாணவர்கள் அலைச்சல் குறையும். ஒருவேளை அந்த ஆட்சியர் உரிய நேரத்தில் வந்திருக்காவிட்டால், அந்த மாணவன் தேர்வு எழுத முடியாத நிலை கூட உருவாகியிருக்கலாம். மேலும் மாணவர்களின் வசிப்பிடம் உள்ள மாவட்டத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கினால் அவர்களும் சிரமப்படாமல் தேர்வு எழுத ஏதுவாக இருக்கும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications