திருத்தணி : பாம்பு கடித்த ஆட்டின் இறைச்சியை சாப்பிட்ட 17 பேருக்கு வாந்திபேதி, மயக்கம்
திருத்தணி: திருத்தணி அருகே பாம்பு கடித்த ஆட்டின் இறைச்சியைச் சாப்பிட்ட 17 பேருக்கு வாந்திபேதி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
திருத்தணி அருகே உள்ளது பெரியகடம்பூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மாள் (48)என்பவருக்கு சொந்தமான வெள்ளாடு ஒன்று கடந்த திங்களன்று புல் மேய்ந்து கொண்டிருந்த போது விஷப் பாம்பு கடித்ததால் பலியானது.
பாம்புக் கடியால் இறந்த ஆட்டின் இறைச்சியை வீணாக்க விரும்பாத எல்லம்மாள், அதை சமைத்துச் சாப்பிட முடிவு செய்தார். அதன்படி, ஆட்டு இறைச்சியை சமைத்து தானும் உண்டு, தனது உறவினர்களுக்கும் கொடுத்துள்ளார்.
ஆட்டு இறைச்சியை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே எல்லம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் 16 பேருக்கும் வாந்திபேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தார் உதவியுடன் அவர்கள் திருத்தணி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை எனத் தெரிவித்தனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications