திருத்தணி : பாம்பு கடித்த ஆட்டின் இறைச்சியை சாப்பிட்ட 17 பேருக்கு வாந்திபேதி, மயக்கம்
திருத்தணி: திருத்தணி அருகே பாம்பு கடித்த ஆட்டின் இறைச்சியைச் சாப்பிட்ட 17 பேருக்கு வாந்திபேதி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
திருத்தணி அருகே உள்ளது பெரியகடம்பூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மாள் (48)என்பவருக்கு சொந்தமான வெள்ளாடு ஒன்று கடந்த திங்களன்று புல் மேய்ந்து கொண்டிருந்த போது விஷப் பாம்பு கடித்ததால் பலியானது.
பாம்புக் கடியால் இறந்த ஆட்டின் இறைச்சியை வீணாக்க விரும்பாத எல்லம்மாள், அதை சமைத்துச் சாப்பிட முடிவு செய்தார். அதன்படி, ஆட்டு இறைச்சியை சமைத்து தானும் உண்டு, தனது உறவினர்களுக்கும் கொடுத்துள்ளார்.
ஆட்டு இறைச்சியை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே எல்லம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் 16 பேருக்கும் வாந்திபேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தார் உதவியுடன் அவர்கள் திருத்தணி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை எனத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications