டிஜிபியே ஒன்னும் செய்யமுடியல.. ஓடி போயிட்டன்னு சொல்லிடுவோம்.. மாணவியை மிரட்டிய பேராசிரியைகள்!
திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவியை அக்கல்லூரி பேராசிரியைகள் மிரட்டும் ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவண்ணாமலை: வேளாண் கல்லூரி மாணவியை அக்கல்லூரி பேராசிரியைகள் மிரட்டும் ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி விவகாரம் ஆளுநர் வரை சென்றது.
இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விடுதி வார்டன்கள்
இந்நிலையில் நிர்மலாதேவி போலவே திருவண்ணாமலை வேளாண் கல்லூரி பேராசிரியைகளும் இதே வேலையை செய்துள்ளனர். அந்த ஆடியோக்கள் வைரலாகி வருகின்றன. கல்லூரி பேராசிரியைகள் புனிதா, மைதிலி இருவரும் விடுதி வார்டன்களாகவும் உள்ளனர்.
தங்கபாண்டியன் டார்ச்சர்
சென்னையை சேர்ந்த இளம்பெண் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் இந்த மாணவிக்கு உதவி பேராசியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அவரு பேச்சை கேள்
இதுதொடர்பாக விடுதி வார்டன்களிடம் புகார் அளித்தார் மாணவி. ஆனால் வார்டன்களாகவும் உள்ள பேராசிரியைகள் புனிதா மற்றும் மைதிலி மாணவியை உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
தவறான பாதை
தங்கபாண்டியனின் ஆசையை நிறைவேற்றினால் உன் வாழ்க்கை செட்டிலாகிவிடும் என்றும், அவர் சொல்வதுபோல் கேட்டு நடந்து கொள் என்றும் கூறி மாணவியை தவறான பாதைக்கு செல்ல வற்புறுத்துகின்றனர்.
ஓடிப்போயிவிட்டாய்..
மறுத்தால் உன்வாழ்க்கைதான் நாசமாகும் என்றும் உனக்கு எதிராக கொடுக்க எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளது என்றும் உன் பெற்றோர் வந்து கேட்டால் நீ இங்கு வரவேயில்லை. எங்கோ ஓடிப்போயிவிட்டாய் என்று கூறிவிடுவோம்.
டிஜிபியே ஒன்னும் முடியல
பெரிய டிஜிபியே ஒன்றும் செய்ய முடியவில்லை என அந்த மாணவியை மிரட்டுகின்றனர். தற்போது இந்த ஆடியோ வைரலாகியுள்ளது. மாணவியை பேராசிரியைகளே உதவி பேராசிரியரின் இச்சைக்கு இணங்க வற்புறுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.