திருவாரூரில் நாம் தமிழர் தனித்து போட்டி.. சீமான் அதிரடி!
திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமான தொகுதியான திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாதம் நடக்க உள்ள இந்த தேர்தலில் தமிழக அரசியலில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இதற்காக கட்சிகள் இப்போதே தீவிரமாக தயாராகி வருகிறது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசித்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை ஏற்கனவே பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியும் களத்தில் குதித்துள்ளது.
அதன்படி திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்த முறை எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்று கூறி இருக்கிறார்.
நாம் தமிழர் இளம் வேட்பாளர் ஒருவரை இந்த தேர்தலில் நிறுத்தும். ஜன.10-ம் தேதி வேட்பாளர் யார் என்று தெரியும். இதற்காக ஆலோன்சாய் செய்து வருகிறோம் என்று சீமான் கூறியுள்ளார். ஏற்கனவே தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, அமமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளதால், தற்போதுவது கட்சியாக நாம் தமிழரும் களமிறங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications