கோட்டையை வென்றாச்சு.. ஆனாலும் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்திருக்கே.. சுதாரிக்க வேண்டும் திமுக!
கம்பீரமான வெற்றியை திமுக பெற்றுவிடவில்லை
சென்னை: வேலூரில் திமுக வெற்றி பெற்றுள்ளது.. ஆனால் அமோக வெற்றி என்றோ, கம்பீரமான வெற்றி என்றோ சொல்லி விட முடியாது.. கஷ்டப்பட்டுதான் வேலூர் கோட்டை.. திமுக கோட்டையாகி உள்ளது!
5-ம் தேதி தேர்தல் நடைபெற்றதை அடுத்து, இன்று காலை ஓட்டு எண்ண ஆரம்பித்தார்கள். நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என 28 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ண ஆரம்பித்தவுடனேயே அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.

கடும் போட்டி
இவர்களுக்கு நடுவில் திடீரென தீபலட்சுமி வாக்குகள் பெற்று, இரு தரப்பின் வயிற்றிலும் புளியை கரைத்தார். இவ்வாறு சிறிது நேரம் மாறி மாறி வாக்கு முடிவுகள் வந்தன. திமுக, அதிமுக தரப்பில் கடுமையான போட்டி நிலவியது.

பேட்டி
பொதுவாக, ஓட்டு எண்ண ஆரம்பித்தால், 2 மணி நேரத்திலேயே ஒரு குத்துமதிப்பான முடிவு தெரிந்து விடும். ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை.. 12-ம் சுற்று வரை ஏசிஎஸ் முன்னிலையில் இருந்தார். அதாவது ஏ.சி.சண்முகம் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். இந்த சமயத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அதிமுக ஜெயித்து விட்டது போல ஒரு பேட்டியும் தந்தார்.

கொண்டாட்டம்
"திமுகவின் போலி பிரச்சாரம் மற்றும் வாக்குறுதிகளை மக்கள் கண்டுகொண்டுவிட்டனர். பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவராக சித்தரிக்கப்பட்டார். அதுகுறித்த மக்களின் கருத்தும் மாறிவிட்டது" என்று சொல்லிவிட்டார். உடனே அதிமுக தலைமையகத்தில் ஸ்வீட் கொடுத்து ஆட்டம் பாட்டம் ஆரம்பமானது.

திடீர் திருப்பம்
ஆனால் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற ஆரம்பித்தார். இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புற ஓட்டுக்களை எண்ண ஆரம்பித்ததுதான். அப்போது முதல் கொஞ்சமும் பின்னடைவு ஏற்படாமல், முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அறிவாலயத்தில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின.

பின்னடைவு
ஆக மொத்தம், ஒரு நீண்ட இழுபறிக்கு பிறகுதான் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே 37 தொகுதிகளை அசால்ட்டாக வெற்றி பெற்ற திமுகவுக்கு வேலூர் வெற்றி என்பது கொஞ்சம் பின்னடைவுதான். இதற்கு காரணம், அதிமுகவின் கடின முயற்சியும், வகுத்து செயல்பட்ட பிரச்சார யுக்தியும்தான். அந்த வகையில் அதிமுகவை பாராட்டவே செய்யலாம்.

கோட்டை
அதனால்தான் இருக்கும் 6 தொகுதிகளில் 3-ல் மட்டுமே திமுகவால் முன்னிலை பெற முடிந்தது. எப்படியோ, இது ஒரு கம்பீரமான வெற்றி என்று சொல்லி கொள்ள முடியாவிட்டாலும், வேலூர் கோட்டையை தனது கோட்டையாக இறுதியில் மாற்றிவிட்டது திமுக!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications