கோட்டையை வென்றாச்சு.. ஆனாலும் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்திருக்கே.. சுதாரிக்க வேண்டும் திமுக!
கம்பீரமான வெற்றியை திமுக பெற்றுவிடவில்லை
சென்னை: வேலூரில் திமுக வெற்றி பெற்றுள்ளது.. ஆனால் அமோக வெற்றி என்றோ, கம்பீரமான வெற்றி என்றோ சொல்லி விட முடியாது.. கஷ்டப்பட்டுதான் வேலூர் கோட்டை.. திமுக கோட்டையாகி உள்ளது!
5-ம் தேதி தேர்தல் நடைபெற்றதை அடுத்து, இன்று காலை ஓட்டு எண்ண ஆரம்பித்தார்கள். நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என 28 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ண ஆரம்பித்தவுடனேயே அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.

கடும் போட்டி
இவர்களுக்கு நடுவில் திடீரென தீபலட்சுமி வாக்குகள் பெற்று, இரு தரப்பின் வயிற்றிலும் புளியை கரைத்தார். இவ்வாறு சிறிது நேரம் மாறி மாறி வாக்கு முடிவுகள் வந்தன. திமுக, அதிமுக தரப்பில் கடுமையான போட்டி நிலவியது.

பேட்டி
பொதுவாக, ஓட்டு எண்ண ஆரம்பித்தால், 2 மணி நேரத்திலேயே ஒரு குத்துமதிப்பான முடிவு தெரிந்து விடும். ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை.. 12-ம் சுற்று வரை ஏசிஎஸ் முன்னிலையில் இருந்தார். அதாவது ஏ.சி.சண்முகம் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். இந்த சமயத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அதிமுக ஜெயித்து விட்டது போல ஒரு பேட்டியும் தந்தார்.

கொண்டாட்டம்
"திமுகவின் போலி பிரச்சாரம் மற்றும் வாக்குறுதிகளை மக்கள் கண்டுகொண்டுவிட்டனர். பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவராக சித்தரிக்கப்பட்டார். அதுகுறித்த மக்களின் கருத்தும் மாறிவிட்டது" என்று சொல்லிவிட்டார். உடனே அதிமுக தலைமையகத்தில் ஸ்வீட் கொடுத்து ஆட்டம் பாட்டம் ஆரம்பமானது.

திடீர் திருப்பம்
ஆனால் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற ஆரம்பித்தார். இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புற ஓட்டுக்களை எண்ண ஆரம்பித்ததுதான். அப்போது முதல் கொஞ்சமும் பின்னடைவு ஏற்படாமல், முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அறிவாலயத்தில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின.

பின்னடைவு
ஆக மொத்தம், ஒரு நீண்ட இழுபறிக்கு பிறகுதான் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே 37 தொகுதிகளை அசால்ட்டாக வெற்றி பெற்ற திமுகவுக்கு வேலூர் வெற்றி என்பது கொஞ்சம் பின்னடைவுதான். இதற்கு காரணம், அதிமுகவின் கடின முயற்சியும், வகுத்து செயல்பட்ட பிரச்சார யுக்தியும்தான். அந்த வகையில் அதிமுகவை பாராட்டவே செய்யலாம்.

கோட்டை
அதனால்தான் இருக்கும் 6 தொகுதிகளில் 3-ல் மட்டுமே திமுகவால் முன்னிலை பெற முடிந்தது. எப்படியோ, இது ஒரு கம்பீரமான வெற்றி என்று சொல்லி கொள்ள முடியாவிட்டாலும், வேலூர் கோட்டையை தனது கோட்டையாக இறுதியில் மாற்றிவிட்டது திமுக!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications