For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு... பற்றி எரியும் வீடுகளால் பதற்றம்

ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு-வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இதனால் தடியடி நடத்திய போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். இன்னொருவரும் பலியானதாக செய்திகள் கூறுகின்றன.

    கட்டுக்கடங்காத போராட்டம்

    கட்டுக்கடங்காத போராட்டம்

    போராட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    குடியிருப்புக்கு தீவைப்பு

    குடியிருப்புக்கு தீவைப்பு

    இந்நிலையில் ஸ்டெர்லைட் குடியிருப்பில் இருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் ஸ்டெர்லைட் குடியிருப்புக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

    வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    இதனால் குடியிருப்புகள் பற்றி எரிவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தீ வைப்பு சம்பவத்தால் தூத்துக்குடி- நெல்லை 4 வழி சாலையில் கரும்புகை மூட்டம் நிலவி வருகிறது.

    தீயணைப்புப் பணி தீவிரம்

    தீயணைப்புப் பணி தீவிரம்

    இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குடியிருப்புகளில் சிக்கியுள்ளவர்களும் வேகமாக மீட்கப்பட்டு வருகின்றனர். சேத விவரம் குறித்து இதுவரை தகவல் இல்லை.

    English summary
    Thoothkudi protesters set fire on Sterlite Employees Residence and and their vehicles.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X