Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 10,000 கடைகள், வணிக நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.

    மாநகரம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் இன்று பல்வேறு அமைப்புகள் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Thoothukudi Bandh: Mass Rally against Sterlite plant expansion

    தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Thoothukudi Bandh: Mass Rally against Sterlite plant expansion

    வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கான முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் முதல் பலகட்டங்களாக போராடி வருகின்றனர்.

    Thoothukudi Bandh: Mass Rally against Sterlite plant expansion

    இன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 10,000 கடைகள், வணிக நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆலையை சுற்றிலும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Thoothukudi Bandh: Mass Rally against Sterlite plant expansion

    ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்களும், பல சமூக அமைப்புகளும் இணைந்து இன்று தூத்துக்குடியில் பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டமும் நடத்த உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+