தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பலியானோரின் எண்ணிக்கை 13 ஆனது!
துப்பாக்கி சூட்டின்போது காயமடைந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 11 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்றும் தூத்துக்குடியில் பதற்றம் தொடர்ந்து. அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 22 வயதான காளியப்பன் என்ற இளைஞர் கொல்லப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த செல்வசேகர் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த செல்வசேகர் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழப்பு 13 ஆக உயர்ந்ததையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications