நாங்கெல்லாம் ஜாலியா இப்படித்தான் விளையாடிக்குவோம்.. பதறியடித்த தொட்டியம் ராஜசேகரன்!
தொண்டர்களை உற்சாகப்படுத்தவே ரூ.20 டோக்கன் கொடுத்தாக பேசியதாக தினகரனின் ஆதரவாளர் தொட்டியம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தொண்டர்களை உற்சாகப்படுத்தவே ரூ.20 டோக்கன் கொடுத்தாக பேசியதாக தினகரனின் ஆதரவாளர் தொட்டியம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தினகரன் அணியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரான தொட்டியம் ராஜசேகரன் பல்வேறு பகீர் தகவல்களை தெரிவித்தார்.
அதாவது ஆர்.கே.நகர் வெற்றிக்காக டோக்கன் விநியோகித்தது மட்டுமின்றி ஜெயலலிதா சிகிச்சை வீடியோவையும் தினகரன் தான் வெளியிட சொன்னார் என்றும் ராஜசேகரன் கூறினார்.

ஒரு வழக்குதானே பார்த்துக்கலாம்
மேலும் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ சிப்பை தினகரன் வெற்றிவேலிடம் கொடுத்தபோது தான் அங்கிருந்ததாகவும் ராஜசேகரன் கூறினார். ஜெயலலிதா வீடியோவை வெளியிட வெற்றிவேல் தயங்கியபோது ''ஒரு வழக்கு தானே பார்த்துக்கொள்ளலாம்'' என்று தினகரன் கூறியதாகவும் ராஜசேகரன் தெரிவித்தார்.

ராஜசேகரன் விளக்கம்
இது தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு தினகரனுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.இந்நிலையில் தான் பேசியது குறித்து தொட்டியம் ராஜசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.

ரூ.20ஐ நம்பி டோக்கன்
அதாவது ஆர்.கே. நகரில் ரூ. 20 டோக்கன் வழங்கியதாக நான் பேசிய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
6000 கொடுத்தவர்களுக்கு ஓட்டு போடாமல் 20 ரூபாய் டோக்கனை நம்பி மக்கள் ஓட்டுப்போட்டுள்ளார்கள் என்று கூறவே அவ்வாறு பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களை உற்சாகப்படுத்த
மேலும் தினகரன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்கூறவே அவ்வாறு பேசியதாகவும் ராஜசேகரன் தெரிவித்தார். செயல்வீரர்கள் கூட்டத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு பேசினேன் என்றும் தொட்டியம் ராஜசேகர் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications