For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - பொதுமக்கள் பீதி!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் பள்ளி ஒன்றிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போன் வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை காமராஜர் சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இன்று காலை மதுரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்றும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

Threatening call for a school in Madurai

இது குறித்து தெப்பக் குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தெப்பக்குளம் போலீசார், வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு போலீசாருடன் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீசார் ஒவ்வொரு வகுப்பறைகளாக சென்று சோதனை நடத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் நடந்த இந்த சோதனையால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

வகுப்புகள் தொடங்கும் முன்பே வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வீடு திரும்பினார்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Madurai school got a threatening call today from an unknown person.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X