வாணியம்பாடி அருகே காரும் ஷேர் ஆட்டோவும் மோதி விபத்து - மூவர் மரணம்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி : வாணியம்பாடி அடுத்த கிரிகமுத்திரம் அருகே காரும் ஷேர் ஆட்டோவும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வாணியம்பாடியில் ஷேர் ஆட்டோ மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு வாணியம்பாடி அருகே ஷேர் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications