ஜெ.வின் கொடநாடு பங்களா கொள்ளை: கேரளாவில் மேலும் 3 பேர் கைது!

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளை தொடர்ந்தது தொடர்பாக மேலும் மூன்று பேர் கேரளாவில் போலீசிடம் சிக்கியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கோவை: ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொள்ளை,கொலை தொடர்பாக கேரள மாநிலத்தில் மேலும் 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடநாடு எஸ்டேட்டுக்கு பயணம் மேற்கொள்வார். சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து ஹெலிஹாப்டர் அல்லது கார் மூலம் நீலகிரியிலுள்ள கொடநாட்டிற்குச் செல்வார்.

Three held in kerala in Kodanad estate murder and robbery case

கொடநாட்டிலிருந்தே தனது அரசியல் மற்றும் அரசு பணிகளை ஜெயலலிதா மேற்கொள்வார். அதனால் தமிழக அரசு அதிகாரிகள் மத்தியில் அப்போதெல்லாம் 'கொடநாடு கேம்ப் அலுவலகம்' என்ற வார்த்தை மிகுந்த பிரபலமான ஒன்று.

ஜெயலலிதா அங்கு இருந்தபோதும் அதற்குப் பிறகு சென்னைக்கு அவர் திரும்பியபோதும் கொடநாடு மிகுந்த போலீஸ் பாதுகாப்போடு இருக்கும். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கொடநாட்டில் போலீஸ் பாதுகாப்பு முற்றிலும் இல்லாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த மாதம் 24ந் தேதி கொடநாடு எஸ்டேட்டில் கொலையும் கொள்ளையும் நடந்துள்ளது. அதுதொடர்பாக இன்று கேரள மாநிலத்தில் ஜாய், ஜெம்சீர் அலி, அமீஷ் அனுப் ஆகியோர் சிக்கினர்.

இவர்களிடம் போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 3 பேர் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+