திருப்பூரில் அனுமதியின்றி தங்கியிருந்த 3 நைஜீரியர்கள் வெளியேற்றம்: தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுமதியின்றி தமிழகத்தில் தங்கியிருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 3 பேர் இன்று சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவைச் சேர்ந்த பலர் கல்வி, வேலை அல்லது சுற்றுலா விசா பெற்று இந்தியாவுக்கு வருகின்றனர்.

இங்கு வந்த பின்னர் ஆன்லைன் மோசடி, போதைப்பொருள் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டு நமது நாட்டினரையே ஏமாற்றி, ஏராளமான பணம் சம்பாதிக்கும் இவர்கள் விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவை விட்டு வெளியேறாமல் கள்ளத்தனமாக இங்கேயே இருந்து வருகின்றனர்.

நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒலோடடோ ஒபோசாடோ என்ற ரிச்சர்டு, டிக்சன், ஒபியோடுன் என்ற ஜெர்ரி. இருபது வயதை கடந்த இவர்கள் பட்டப்படிப்பு படிப்பதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன் இந்தியா வந்தனர்.

திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்த அவர்கள், தங்கி இருந்த வீட்டின் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுடன் சண்டை சச்சரவுகளிலும், வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து அவர்களை "கியூ' பிரிவு போலீசார் கைது செய்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்தனர். அவர்கள் விசா காலத்திற்கும் அதிகமாக தங்கி இருந்ததால், மூவரையும் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

தமிழக அரசின் உத்தரவினையடுத்து, இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக நைஜீரியாவுக்கு செல்லும் விமானத்தில் அவர்கள் மூவரும் ஏற்றி அனுப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+