For Daily Alerts
Just In
ஒசூர் அருகே, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் டாக்டர் தம்பதி உட்பட மூவர் பலி
Recommended Video
முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் மூவர் பலி- வீடியோ
சென்னை: ஒசூர் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவவட்டம், ஓசூர் அருகேயுள்ள சூளகிரி அருகே கொல்லப்பள்ளி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னாலிருந்து வேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் இறந்தவர்கள், பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் தம்பதி ராமசந்திரன், அம்புஜா மற்றும் ஓட்டுநர் பைசு என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தால் காலையில் சற்று நேரம் அந்தத பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
English summary
Three people were killed in a road accident near Hosur. Three people, including a car driver, were killed on the spot when the car was hit by a truck.