நெல்லையில் சிறுத்தை, புலி நடமாட்டம்.. பொதுமக்கள் பீதி
நெல்லை அருகே உள்ள கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் அதிகாரித்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி: நெல்லை அருகே கிராமப்புறத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதாகல் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் கோவிந்தபேரி, அழக்கப்புரம், சிவசைலம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகள் உள்ளன. இங்குள்ள பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். வீடுகளில் கால்நடைகளையும் இவர்கள் வளர்த்து வருகின்றனர். மலையடிவார தோட்டங்களில் காட்டு பன்றி, மிளா உள்ளிட்டவை புகுந்து நெல், நிலக்கடலை, சிறு கிழங்கு பயிர்களை நாசம் செய்து வருகிறது.

வேலம்மாள் என்பவர் மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் இந்தப் பகுதியல் வசித்து வருகிறார். இவரது மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை அவரது வீட்டில் காவலுக்கு போட்டிருரந்த நாய் பயங்கரமாக குறைத்தது. இந்த சத்தம் கேட்டு வேலம்மாள் மருமகள் சக்தி எட்டி பார்த்தார். அப்போது நாய் ஒன்றை சிறுத்தை கடித்து குதறி கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த சக்தி அலறினார். இதனைத் தொடர்ந்து, சிறுத்தை நாயை கவ்வி கொண்டு ஓடிவிட்டது. இரவு முழுவதும் குழந்தைகளுடன் சக்தி பயத்தில் இருந்தார். இன்று காலை எழுந்து பார்த்தபோது நாயை கடித்த இடத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பும் இது போன்றே அவர்கள் வளர்த்து வந்த இன்னொரு நாயை சிறுத்தை தூக்கிச் சென்றுள்ளது.இந்த சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வேலம்மாள் கூறும்போது எங்கள் வீட்டில் பெண்கள் மட்டுமே வசித்து வருகிறோம். இந்த பகுதியில் மின் விளக்குகள் இருந்தும் மின் கம்பங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் இங்கு சிறுத்தை அடிக்கடி புகுந்து ஆடு, மாடுகளை கடித்து கொல்கிறது. தெரு விளக்குகளை அன்றாடம் எரிய வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுத்தையை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications