திருவண்ணாமலையில் புலி நடமாட்டம்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல மலையும், பவுர்ணமி கிரிவலமும் பிரசித்தி பெற்றதாகும். இரவு, பகல் என எந்நேரமும் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வலம் வருவார்கள்.

இந்நிலையில், கிரிவலப்பாதை மலையடிவாரத்தில் நேற்று மாலை புலி நடமாட்டம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரணியை அடுத்த அடையபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன்கள் லட்சுமணன் (18), ராமு (18). இரட்டையர்களான இருவரும் இந்நிலையில், திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள பச்சையம்மன் கோயில் குளத்தில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். அப்போது, புலி ஒன்று உருமியபடியே வந்ததை இருவரும் பார்த்தனராம்.

Tiger panic in Tiruvannamalai

மேலும் நாய் ஒன்று கொன்று கிடந்ததையும் ஊர்மக்கள் பார்த்துள்ளனர். இருப்பினும் புலி கால்தடம் எதுவும் தென்படவில்லை. இதையடுத்து வனத்துறையினர் இரவு நேரத்தில் யாரும் வெளியே வருவதையும், கிரிவலப்பாதையில் செல்வதையும் தவிர்க்கும்படி கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+