ஓ.பன்னீர்செல்வத்துடன் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதி சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதி, முன்னாள் முதல்வரை ஓ.பன்னீர்செல்வத்த்தை சந்தித்து பேசினார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது. அந்த அணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. அதிமுக மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் நிர்வாகிகள், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tilakavati meet with o pannirselvam

ஏற்கனவே அவரது அணியில் ஓபிஎஸ் ஆதரவாக நடராஜ், ஆறுகுட்டி, மாணிக்கம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களும் எம்.பிக்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பொது மக்கள் பெரும்பாலானோர் ஆதரவும் ஓபிஎஸ் பக்கம் தான் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதி, ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்ததாகவும் தெரிகிறது. சந்திப்புக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை உடையவர் திலகவதி. காவல்துறை அதிகாரியாக மட்டுமல்லாமல் நல்ல எழுத்தாளராகவும் சிறப்பு பெற்றவர் திலகவதி. பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+