திருச்சி திமுக மாநாடு: ராமஜெயம் இல்லையே… கண் கலங்கும் கே.என்.நேரு

திமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என். நேரு மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்தமுறை திமுக மாநாடுகள் திருச்சியில் நடைபெற்ற போது அவரது தம்பி ராமஜெயம் உடனிருந்தார். இந்த முறை தம்பியை இழந்து தனி ஆளாய் மாநாட்டு பணிகளை சிறப்பாக செய்துள்ளாராம் கே.என்.நேரு.
மாநாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரை, மாநாட்டுச் செலவுகள் ரூ.13 கோடியை தாண்டிவிட்டதாம். மாநாட்டில் இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
250 ஏக்கரில் பிரம்மாண்டம்
திருச்சி பிராட்டியூர் பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 1100 அடி நீளம், 600 அடி அகலத்தில் மாநாட்டுப் பந்தல், 200 அடி நீளம், 80 அடி அகலத்தில் மாநாட்டு மேடை, மாநாட்டு நிகழ்வை கடைசியிலுள்ளவர்களும் காணும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எல்.சி.டி.டிவிகள், வைக்கப்பட்டுள்ளன.
கே.என். நேருவின் தம்பி
1996 மற்றும் 2006-ல் திருச்சியில் திமுக-வின் 8 மற்றும் 9-வதுமாநில மாநாடுகள் நடைபெற்றன. அப்போது, நேருவின் நிஜ பிம்பமாகவும் அவரின் தளபதியாகவும் செயல்பட்டு வந்த அவரது தம்பி ராமஜெயம் மாநாட்டு ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னின்று கவனித்துக் கொண்டார்.
ராமஜெயம்
1996 கொட்டப்பட்டிலும் 2006-ல் செம்பட்டிலும் திமுக மாநாடுகள் நடைபெற்றன. மாநாடு அறிவிக் கப்பட்டதுமே, புதர் மண்டிக்கிடந்த அந்த இடங்களை ராமஜெயம் தனி ஆளாகவே முன்னின்று புல்டோசர் வைத்து சுத்தம் செய்து மாநாட்டுத் திடலை தயார் செய்தாராம்
ராமஜெயம் இல்லையே
அந்த நேரங்களில் கே.என்.நேரு அவ்வப்போது வந்து ஆலோசனைகளை சொல்லி விட்டுப் போவார். அண்ணனுக்காக அத்தனையையும் இழுத்துப் போட்டுச் செய்தார் ராமஜெயம். இந்த மாநாட்டில் ராமஜெயம் இல்லாதது நேருவுக்கு மாத்திரமல்ல.. கட்சி யினர் அனைவருக்குமே பெரும் இழப்புதான் என்கின்றனர் திமுக வினர்.
நேரு கலக்கம்
10 வது திமுக மாநாட்டில் ராமஜெயம் இல்லாமன் போனதன் தாக்கமும் வாட்டமும் நேருவின் முகத்தில் நன்றாகவே தெரிகிறது. ஒவ்வொன்றையும் செய்துவிட்டு கண் கலங்கிப் போய் பார்க்கிறாராம் நேரு.
நேருவுக்கு வருத்தம்
மாநாட்டு வரவேற்பு வளைவுகளுக்கு மறைந்த திமுக நிர்வாகிகள் பெயர்கள் சூட்டப்பட் டுள்ளன. அதில் ஒரு வளைவுக்கு ராமஜெயத்தின் பெயரை வைக்க வேண்டுமென நேரு ஆதரவாளர்கள் கேட்டதற்கு தலைமையிடமிருந்து சரியான பதில் இல்லையாம். இதில்கூட நேருவுக்கு சற்று வருத்தம்தான் என்கின்றனர்.
ராமஜெயம் கொடிக்கம்பம்
இதைப் புரிந்து கொண்டுதான், மாநாட்டு திடலின் முகப்பில் 90 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டு அதனடியில் ராமஜெயத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் அந்த கொடிக்கம்பத்தை அண்ணாந்து பார்த்து கலங்கி நிற்கிறாராம் கே.என். நேரு.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications