ஈ.வி.கே.எஸ். என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான்.. திருநாவுக்கரசர் அதிரடி பதில்!
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, திருநாவுக்கரசரை யார் என்றே எனக்கு தெரியாது என கூறி பேட்டியை முடித்துக்கொண்டார் இளங்கோவன். இதற்கு திருநாவுக்கரசர் அளித்த பதிலில், அவர் என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று இளங்கோவன் நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பும்போது, திருநாவுக்கரசரை யார் என்றே எனக்கு தெரியாது என கூறி பேட்டியை முடித்துக்கொண்டார் இளங்கோவன்.

இந்தநிலையில், ஈ.வி.கே.எஸ் என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "ஹைட்ரோகார்பன் பிரச்சினையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் தான் தீர்வு ஏற்படும். ஈ.வி.கே.எஸ். என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான்.
என்னைத் தெரியாது என்று கூறியதால் இனிமேல் என்னை அவர் திட்ட மாட்டார். தெரிந்தவர்களைத் தான் திட்ட முடியும் தெரியாதவர்களை எப்படித் திட்ட முடியும்?
இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் முன்னாள் மற்றும் இன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் நடுவே நடைபெறும் பனிப்போர் இப்போது வீதிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications