நெல்லை ரோஸ்மேரி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து.. அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அங்கு தீயை அணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
Recommended Video

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அங்கு தீயை அணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
நெல்லையில் இருக்கும் பிரபல ரோஸ்மேரி பள்ளியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளியின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. திடீர் என்று அறையில் கட்டிடங்கள் பற்றி எரிந்து இருக்கிறது.

இதற்கு சரியான காரணம் என்ன என்று தெரிவிக்கப்படவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தீ விபத்து பற்றி தெரிந்தவுடன் மாணவர்கள் எல்லோரும் வேகமாக வெளியேற்றப்பட்டார்கள். இதனால் அதிருஷ்டவசமாக மாணவர்கள், ஆசிரியர்கள் தப்பினர். யாருக்கும் காயமோ, எந்த விதமான உயிர்சேதமோ ஏற்படவில்லை.

கட்டிட பகுதியை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு வருகிறார். தீயணைக்கும் பணி 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இது குறித்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications