நெல்லை, தூத்துக்குடியில் வெள்ள அபாயம்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் !

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் பெய்த வட கிழக்கு பருவ மழையின் தாக்கத்தினால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன. வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. ஆனாலும் பல இடங்களில் வீடுகளை இழந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் உள்ளிட்ட இடங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tirunelveli, Tuticorin flood risk: national disaster rescue teams Ready

இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த சில தினங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புனேயில் இருந்து வந்துள்ள 5 குழுக்கள் நெல்லையில் முகாமிட்டுள்ளனர். உதவி கமிஷனர் குமார் ராகவேந்திரா தலைமையில் ஒவ்வொரு குழுவிலும் 45 பேர் வீதம் இரண்டு குழுக்கள் உள்ளனர். உதவி கமிஷனர் வைரவநாதன் தலைமையில் 110 பேர் கொண்ட மூன்று குழுக்கள் தூத்துக்குடி சென்றனர்.

ஒவ்வொரு குழுவும், அங்கேயே உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கூடிய எட்டு ரப்பர் படகுகள், ஆழ்கடலில் சென்று மீட்பு பணியில் ஈடுபடும் டைவ் வீரர்கள் நான்கு பேர், ஆக்ஸிசன் சிலிண்டர்கள், தற்காலிக மின்விளக்குகள் ஆகியவற்றோடு தயார் நிலையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+