வெயிலுக்கு நடுவே.. கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை.. திருப்பூர் மக்கள் செம குஷி!
திருப்பூர்: திருப்பூர் மாநகர் பகுதிகளில் திடீரென சூறைக்காற்று சுழன்றுடித்து ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கனமழையுடன், திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறுவர்கள், ஆலங்கட்டிகளை அள்ளி விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சுமார் 0.9 கிமீ உயரத்தில் மேற்கு ராஜஸ்தான் முதல் முதல் குமரிக்கடல் வரை, கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், விதர்பா, தெலங்கானா, ராயலசீமா மற்றும் உள்தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று சனிக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலை பகுதிகள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மாலையில் மழை பெய்தது. திருப்பூர் மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சூறைக்காற்று சுழன்றுடித்து ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அகனமழையுடன், ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறுவர்கள், ஆலங்கட்டிகளை அள்ளி விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications