திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திறந்த வெளியில் துப்புரவாளர் பிரேத பரிசோதனை செய்த அவலம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திறந்த வெளியில் துப்புரவு பணியாளர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
Recommended Video

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திறந்த வெளியில் துப்புரவு பணியாளர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளதை அடுத்து மருத்துவர் உள்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரயிலில் அடிபட்டு இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

துப்பரவு பணியாளர்
அப்போது மருத்துவர்கள் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த துப்புரவு பணியாளரும் மருந்தாளுநரும் திறந்த வெளியில் பிரேத பரிசோதனை செய்தனர். இதனால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து தகவலறிந்த மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் இன்பசேகரன் கூறுகையில் திறந்த வெளியில் பிரேத பரிசோதனை செய்தது குறித்து விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

துப்புரவு பணியாளர் இடமாற்றம்
இந்நிலையில் துப்புரவு பணியாளர் பிரேத பரிசோதனை செய்தது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் விஷ்வ பிரியா அரக்கோணம் மருத்துவமனைக்கும், துப்புரவு பணியாளர் அப்பாவு, மருந்தாளுநர் ருக்மாங்கதன் ஆகியோர் முறையே திருத்தணி மற்றும் ஆவடி அரசு மருத்துவமனைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மக்கள் அதிர்ச்சி
இந்த உத்தரவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் தயாளன் பிறப்பித்தார். திறந்தவெளியில் துப்புரவு பணியாளர் பிரேத பரிசோதனை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications