உயிர் பறிக்கும் டெங்கு.. போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட தமாகா கோரிக்கை
தூத்துக்குடி: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி பல உயிர்களைப் பறித்து வருவதால் ஒதை ஒழிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
தூத்துக்குடிக்கு வந்த யுவராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்குகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள் என பலர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்திடும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொள்ளவேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி என்ற பெயரில் மணல்கொள்ளை நடந்து வருகிறது. பசுமை தீர்ப்பாயம் எச்சரித்த பின்பும் மணல் கொள்ளையானது அரசின் துணையோடு நடந்து வருகிறது. தூர் வாரும் பணியில் நடந்துவரும் முறைகேடுகள் மற்றும் மணல்கொள்ளையை தமிழக அரசு உடனடியாக தடுக்காவிட்டால் வரும் நாட்களில் தமாகா சார்பில் அணையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் சீன பட்டாசு விற்பனையை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளபோதும் போலீசாரின் துணையோடு ஆங்காங்கே சீன பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. இதற்கு முடிவுகட்ட சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்களை கைது செய்திடவேண்டும். அரசு இதனை தீவிரமாக கண்காணித்து தடுத்திடவேண்டும்.
தமாகாவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா வரும் 30ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெறவுள்ளது என்றார். பேட்டியின்போது தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் வடக்கு கதிர்வேல், தெற்கு எஸ்.டி.ஆர்.விஜயசீலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications