அந்தமான் அருகே தோணியுடன் மாயமான தூத்துக்குடிக்காரர்: மீட்க கோரி மனைவி கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: அந்தமான் கடல் அருகே தோணியுடன் மாயமான மீனவரை மீ்ட்கக் கோரி அவரது மனைவி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த அன்னை வேளாங்கண்ணி என்ற பெயருடைய தோணி அந்தமான் துறைமுகமான போர்ட்பிளேயரில் இயங்கி வருகிறது. இதில் மாலுமியாக தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும் மற்றும் பணியாளர்களாக அந்தமானை சேர்ந்த 6 பேரும் இருந்துள்ளனர்.

TN based man missing near Andaman: Wife appeals to collector

இதில் தூத்துக்குடியை சேர்ந்த கைத்தான் என்ற டிரைவரும் இருந்தார். இந்த நிலையில் இந்த தோணி கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி போர்ட்பிளேயரில் இருந்து 200 டன் ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு நிகோபார் தீவுக்கு புறப்பட்டது. அங்கிருந்து 80 கடல் மைல் தொலைவுள்ள கார் நிகோபார் தீவை தோணி 22 மணி நேரத்தில் சென்றடைவது வழக்கம். இந்நிலையில் 35 மணி நேரத்திற்கு மேலாகியும் தோணி சென்று சேரவில்லை.

இதனால் அந்தமான் கடலோர காவல் படையினர் தோணியை ஹாடபே கடல் பகுதியில் தேடி பார்த்தனர். தோணி குறித்த எந்த தகவலும கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரண்டு மாத காலம் ஆகியும் ஹெலிகாப்டர் மூலம் தேடியும் தோணி மாயமானது குறித்து எந்த தகவலும் இல்லை.

இதனால் அதில் சென்ற தொழிலாளர்களின் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். அவர்களை அருகில் வசிக்கும் ஆதிவாசிகள் அல்லது கொள்ளையர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கைத்தானை மீட்டு தரக் கோரி அவரது மனைவி தூத்துக்குடி கலெக்டர் அலுவலத்தில் குடும்பத்துடன் வந்து கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+