அமைச்சரவை கூட்டம்... பொங்கல் பரிசு.. மிதிவண்டி வழங்கும் திட்டம்.. ஓபிஎஸ் பிசி!
பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னர் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. 30 நிமிடங்கள் நடைபெற்ற இக்கூட்டத்துக்குப் பின்னர் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2-வது அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் நிலவும் வறட்சி, விவசாயிகள் தற்கொலை, ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் இக்கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அதேபோல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தையும் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications