டிரான்ஸ்பர் உத்தரவு எதுவும் வரவில்லை: சொல்கிறார் சந்தீப் சக்சேனா
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பணியில் இருந்து தன்னை விடுவிப்பது தொடர்பான எந்த உத்தரவும் வரவில்லை என சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், அப்போதைய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீண்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பிறகு, ஸ்ரீரங்கம் மற்றும் ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்துதல், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், ‘ஈசி' என்ற புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சந்தீப் சக்சேனா மேற்கொண்டு வந்தார்
இந்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி பணியில் இருந்து சந்தீப் சக்சேனா விடுவிக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் விரைவில் வேறு ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
சக்சேனா விருப்பத்தின் பேரில்,அவரை பணியில் இருந்து தேர்தல் ஆணையம் விடுவிப்பதாகவும், விரைவில் அவர் தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியானது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சந்தீப் சக்சேனா மாற்றம் குறித்த தகவல், தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, சந்தீப் சக்சேனாவை செய்தியாளர்கள் சந்தித்து கேட்டனர், அவர்களுக்கு பதிலதித்த சந்தீப் சக்சேனா, தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை என்றார். தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான விஷயத்தில் நான் எந்தக் கருத்தும் கூற முடியாது என்றும் கூறினார்.
நான் தமிழக அரசின் கீழ் பணியாற்றினாலும், தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டவன். அங்கிருந்தும் இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. தலைமைத் தேர்தல் அதிகாரியாக என் பணியை தொடர்கிறேன். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவரங்களை வியாழக்கிழமை வெளியிடுகிறேன் என்றும் தெரிவித்தார் சந்தீப் சக்சேனா.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications