டிரான்ஸ்பர் உத்தரவு எதுவும் வரவில்லை: சொல்கிறார் சந்தீப் சக்சேனா
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பணியில் இருந்து தன்னை விடுவிப்பது தொடர்பான எந்த உத்தரவும் வரவில்லை என சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், அப்போதைய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீண்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பிறகு, ஸ்ரீரங்கம் மற்றும் ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்துதல், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், ‘ஈசி' என்ற புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சந்தீப் சக்சேனா மேற்கொண்டு வந்தார்
இந்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி பணியில் இருந்து சந்தீப் சக்சேனா விடுவிக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் விரைவில் வேறு ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
சக்சேனா விருப்பத்தின் பேரில்,அவரை பணியில் இருந்து தேர்தல் ஆணையம் விடுவிப்பதாகவும், விரைவில் அவர் தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியானது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சந்தீப் சக்சேனா மாற்றம் குறித்த தகவல், தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, சந்தீப் சக்சேனாவை செய்தியாளர்கள் சந்தித்து கேட்டனர், அவர்களுக்கு பதிலதித்த சந்தீப் சக்சேனா, தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை என்றார். தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான விஷயத்தில் நான் எந்தக் கருத்தும் கூற முடியாது என்றும் கூறினார்.
நான் தமிழக அரசின் கீழ் பணியாற்றினாலும், தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டவன். அங்கிருந்தும் இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. தலைமைத் தேர்தல் அதிகாரியாக என் பணியை தொடர்கிறேன். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவரங்களை வியாழக்கிழமை வெளியிடுகிறேன் என்றும் தெரிவித்தார் சந்தீப் சக்சேனா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications