அரசியல் ஆதாயத்துக்கான சி.ஏ.ஏ. குறித்த பொய் பிரசாரம், விஷம செயல்களை புறந்தள்ளுங்கள்: ஈபிஎஸ்-ஓபிஎஸ்
சென்னை: அரசியல் ஆதாயத்துக்காக பரப்பப்படும் சி.ஏ.ஏ. குறித்த பொய் பிரசாரம் மற்ற்ம் விஷம செயல்களை சிறுபான்மை மக்கள் புறந்தள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதே பாணியில் தமிழகத்திலும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போராட்டக்காரர்களின் ஒற்றை கோரிக்கை. சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் தமிழக அரசு இதனை நிராகரித்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் இன்று கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழக அரசு, இஸ்லாமியர்களுக்கு செய்து வரும் நிதி உதவிகள் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அத்துடன் விஷமப் பிரச்சாரங்களை செய்து சுயலாபம் அடைய சதி திட்டம் தீட்டுவோரிடம், சிறுபான்மை மக்கள் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறோம்; சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக கழகம் எப்போதும் செயல்படும் என்றும் அதில் இருவரும் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் வெளியிட்ட அறிக்கை:
தலைமைக் கழக அறிவிப்பு
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 21, 2020
விஷமப் பிரச்சாரங்களை செய்து சுயலாபம் அடைய சதி திட்டம் தீட்டுவோரிடம், சிறுபான்மை மக்கள் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக கழகம் எப்போதும் செயல்படும். #AIADMK pic.twitter.com/PZQyR8YZI8
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications