தேர்தல் முடிவு வரும் வரை கருத்து சொல்ல மாட்டேன்- சசியுடன் வாக்களித்த ஜெ. பேட்டி
சென்னை: தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்தார்.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் பிரபல தலைவர்கள் தங்கள் வாக்கினை காலை முதலே பதிவு செய்து வருகின்றனர்.

ஓட்டு போட்ட ஜெ.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மத்திய சென்னைக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.
அவருடன் அவருடைய தோழி சசிகலாவும் வாக்களிக்க வந்தார். அவர் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த போது ஏராளமான செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.

அமைதியான தேர்தல்
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி வருவதாக கூறினார்.
முடிவு வரட்டும்
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் முடிவுக்குப் பின்னர் எனது கருத்தைச் சொல்வேன் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
கனிமொழி குற்றச்சாட்டு
திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி, சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 144 தடை உத்தரவு போடப்பட்டதால் எதிர்கட்சியினர் ஒடுக்கப்பட்டனர். ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது என்றார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications