தேர்தல் முடிவு வரும் வரை கருத்து சொல்ல மாட்டேன்- சசியுடன் வாக்களித்த ஜெ. பேட்டி
சென்னை: தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்தார்.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் பிரபல தலைவர்கள் தங்கள் வாக்கினை காலை முதலே பதிவு செய்து வருகின்றனர்.

ஓட்டு போட்ட ஜெ.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மத்திய சென்னைக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.
அவருடன் அவருடைய தோழி சசிகலாவும் வாக்களிக்க வந்தார். அவர் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த போது ஏராளமான செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.

அமைதியான தேர்தல்
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி வருவதாக கூறினார்.
முடிவு வரட்டும்
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் முடிவுக்குப் பின்னர் எனது கருத்தைச் சொல்வேன் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
கனிமொழி குற்றச்சாட்டு
திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி, சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 144 தடை உத்தரவு போடப்பட்டதால் எதிர்கட்சியினர் ஒடுக்கப்பட்டனர். ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது என்றார்.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications