உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் இந்திரா பானர்ஜி.. முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை தமிழக முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை தமிழக முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகிறார் நீதிபதி இந்திரா பானர்ஜி. இவரது பதவிக்கலாம் முடிவடைவதை அடுத்து , தற்போது அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் சில நாட்களில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் இல்லத்திற்கு சென்று முதல்வர் பழனிசாமி சந்திப்பு நடத்தினார்.
சந்திப்பில் இந்திரா பானர்ஜிக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார். பணியை சிறப்பாக தொடங்க வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications