பொன். ராதாகிருஷ்ணன் உட்பட அத்தனை தமிழக எம்.பிக்களும் ராஜினாமா செய்யுங்க!- வலுக்கும் குரல்
ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்யாத மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உட்பட தமிழக எம்.பிக்கள் அத்தனை பேரும் ராஜினாமா செய்யுங்கள் என்று குரல் தற்போது தமிழகம் எங்கும் வலுவடைந்து வருகிறது.
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அலங்காநல்லூரில் கடந்த நான்கு நாட்களாகவும், சென்னை, கோவை, நெல்லை, மதுரையில் கடந்த 3 நாட்களாகவும் இரவு பகலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

கை விரித்த மோடி
ஆனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழர் உணர்வுகளை நன்றாக அறிந்துள்ளேன். அதனை மதிக்கிறேன். இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அவரசச் சட்டம் குறித்து அவர் எதுவும் அறிவிக்கவில்லை.

நல்லதே நடக்கும்
அதேபோல், மாநில அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள். பொறுமையாக இருங்கள் நல்லதே நடக்கும் என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி கைவிரித்ததையடுத்து, போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எழுச்சி இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

ராஜினாமா செய்யுங்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே பொய்யான வாக்குறுதிகளை கொடுத்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

ஆட்சியை கலைங்கப்பா
நாங்க ஓட்டு போட்டு நீங்க ஆட்சிக்கு வந்தீங்க... எங்களுக்கு நல்லது செய்யாத நீங்க ராஜினாமா செய்யுங்க. இல்லையா ஆட்சியை கலைங்க என்று ஆவேசமாக அலங்காநல்லூர் முதல் ஐடி கம்பெனி ஊழியர்கள் வரை கூறத்தொடங்கியுள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications