குட்கா ரெய்டு: நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.. முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு
Recommended Video

சென்னை: நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் குட்கா ஊழல் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
நேற்று முதல்நாள் தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, பாண்டிச்சேரி. பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. சிபிஐ அதிகாரிகள் 450 பேர் இதில் ஈடுபட்டார்கள். மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது.

பேட்டி
டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

உத்தரவுகள்
குட்கா விவகாரம் வெடித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.குட்கா ஊழல் குறித்த சிபிஐ சோதனை தொடர்பாக ஜார்ஜ் விளக்கம் அளித்தார். நொளம்பூரிலுள்ள இல்லத்தில் வைத்து ஜார்ஜ் பேட்டி அளித்தார். மதுரை நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்று நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி ஜார்ஜ் பேட்டி அளித்தார்.

சிலவற்றை கூற விரும்பவில்லை
அதில், நான் சந்தித்து வரும் பிரச்சனைகளை கூற விரும்பவில்லை. சில நீதிமன்ற மேற்கோள்களை மட்டும் கூற விரும்புகிறேன்.விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு தெரிவிக்க விரும்பவில்லை.திமுக எம்.எல்.ஏ அன்பழகன் குட்கா முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.குட்கா உற்பத்தியாளர்களிடம் நான் லஞ்சம் வாங்கியதாக மனுவில் கூறியுள்ளார்.வழக்கில் குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் சென்னை போலீஸ் கமிஷனராக இல்லை.

அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை
கிரிமினல்கள் காகிதத்தில் எழுதியதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.33 ஆண்டுகால அரசு பணியில் நான் எந்த தவறும் செய்யவில்லை.

தன்னுடைய பெயர் இல்லை
குற்றச்சாட்டில் எங்கும் நேரடியாக என் பெயர் இல்லை.சிபிஐ நேரடியாக எதிலும் என்னை குறிப்பிடவில்லை.சென்னை கமிஷனராக நான் பதவியேற்ற போதே குட்கா ஊழல் பற்றிய தகவல் வந்தது. அப்போது நான் யார் மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை. நான் உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே பேசுகிறேன்.

அப்போதே சோதனை
2011ல் இருந்தே குட்கா புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தினேன்.சில குடோன்களில் சோதனையும் செய்யப்பட்டது.ஆனால் குடோன்களில் எங்கும் புகையிலை பொருட்கள் இல்லை.இதனால் அரசிடம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தேன், என்றுள்ளார்
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications